அதிமுக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய திமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2011-2021): பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானது. முக்கிய சம்பவங்கள்:
பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011): இமானுவேல் சேகரன் குருபூஜையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.
காவல் ஆய்வாளர் ஆல்பில் சுதன் கொலை: சமூக விரோதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மரக்காணம் கலவரம் (2013): பொதுச் சொத்துகள் சேதம், தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைப்பு.
தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை: கீழ வல்லநாட்டில் முதல்வர் சுரேஷ் கல்லூரி வளாகத்தில் வெட்டிக் கொலை.
சுவாதி கொலை (2016): சென்னை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண் வெட்டிக் கொலை.
கூடங்குளம் போராட்டம்: அமைதியான போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறை.
சல்லிக்கட்டு போராட்டம் (2017): காவல்துறையே வாகனங்களுக்கு தீ வைத்து குற்றம் சாட்டிய அவலம்.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் (2020): காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம் நாட்டையே உலுக்கியது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு (2018): தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் உயிரிழப்பு.
சாதி ஆணவக் கொலைகள், பொதுச் சொத்து அழிப்பு ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்தன. பழனிசாமியின் ஆட்சி, சட்டத்தை கேலிக்கூத்தாக்கி, மக்களின் நம்பிக்கையை இழந்தது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2021-2025): திராவிட மாடல் அரசு, அதிமுக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து, நிலையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது:
குற்ற விகிதம் குறைப்பு: 2024-ல் கொலை விகிதம் 1.1 (தேசிய சராசரி 2.2), கடந்த 12 ஆண்டுகளில் மிகக் குறைவு.
தீவிர குற்றத் தடுப்பு: அதிமுக ஆட்சியில் 1,929 ரவுடிகள் தடுப்புக் காவலில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 3,645 ரவுடிகள் சிறையில் அடைப்பு.
ரவுடிகள் கட்டுப்பாடு: A மற்றும் A+ வகை ரவுடிகளின் எண்ணிக்கை 50% குறைப்பு.
முதலமைச்சரின் நேரடி மேற்பார்வை: மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை திறம்பட செயல்படுகிறது.
குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி.
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் இருந்த சட்டம் ஒழுங்கை உயர்த்திப்பிடித்து மக்களுக்கு பாதுக்காப்பையும் தொழில் வளர்ச்சியையும் சாத்தியமாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு.