அதிமுக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய திமுக ஆட்சி

11-05-2025
2 minute read

அதிமுக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை சீர்படுத்திய திமுக ஆட்சி

eps

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2011-2021): பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானது. முக்கிய சம்பவங்கள்:

பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011): இமானுவேல் சேகரன் குருபூஜையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.

காவல் ஆய்வாளர் ஆல்பில் சுதன் கொலை: சமூக விரோதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

மரக்காணம் கலவரம் (2013): பொதுச் சொத்துகள் சேதம், தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைப்பு.

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை: கீழ வல்லநாட்டில் முதல்வர் சுரேஷ் கல்லூரி வளாகத்தில் வெட்டிக் கொலை.

சுவாதி கொலை (2016): சென்னை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண் வெட்டிக் கொலை.

கூடங்குளம் போராட்டம்: அமைதியான போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறை.

சல்லிக்கட்டு போராட்டம் (2017): காவல்துறையே வாகனங்களுக்கு தீ வைத்து குற்றம் சாட்டிய அவலம்.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் (2020): காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம் நாட்டையே உலுக்கியது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு (2018): தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் உயிரிழப்பு.

சாதி ஆணவக் கொலைகள், பொதுச் சொத்து அழிப்பு ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்தன. பழனிசாமியின் ஆட்சி, சட்டத்தை கேலிக்கூத்தாக்கி, மக்களின் நம்பிக்கையை இழந்தது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2021-2025): திராவிட மாடல் அரசு, அதிமுக ஆட்சியில் சீரழிந்த சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து, நிலையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது:

குற்ற விகிதம் குறைப்பு: 2024-ல் கொலை விகிதம் 1.1 (தேசிய சராசரி 2.2), கடந்த 12 ஆண்டுகளில் மிகக் குறைவு.

தீவிர குற்றத் தடுப்பு: அதிமுக ஆட்சியில் 1,929 ரவுடிகள் தடுப்புக் காவலில் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 3,645 ரவுடிகள் சிறையில் அடைப்பு.

ரவுடிகள் கட்டுப்பாடு: A மற்றும் A+ வகை ரவுடிகளின் எண்ணிக்கை 50% குறைப்பு.

முதலமைச்சரின் நேரடி மேற்பார்வை: மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை திறம்பட செயல்படுகிறது.

குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதி.

அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் இருந்த சட்டம் ஒழுங்கை உயர்த்திப்பிடித்து மக்களுக்கு பாதுக்காப்பையும் தொழில் வளர்ச்சியையும் சாத்தியமாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு.

‘பொல்லாத’ பழனிசாமிக்கு பொள்ளாச்சியே சாட்சி!

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.

"அரசு பள்ளியில் படித்த என்னை அமைச்சராக்கிய பெருமை முதலமைச்சரையே சேரும்"- அமைச்சர் கோவி.செழியன் நெகிழ்ச்சி

உதகை அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

*🌟 திராவிட மாடல் அரசு - மகளிர் முன்னேற்றத்தில் நாட்டிற்கே முன்னோடி! 🌟*

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மகளிர் சமுதாய மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது! 💪

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload x