முத்தமிழ் அறிஞர் கலைஞர் : என் வழிகாட்டி, என் ஆசான், என் தலைவர் - பாகம் 1

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளான இன்று, கலைஞர் பற்றிய எனது நினைவுகளை இங்கே பதிவிடுகிறேன்.

kalaingar102

மு. க எனும் பேரன்புகாரர்

கழக உடன்பிறப்புகளிடம்,

  • கலைஞரை ஏன் பிடிக்கும்?
  • எதனால் கலைஞரால் ஈர்க்கப்பட்டீர்கள்?

என்று கேட்டால், முதலில் அவரின் தமிழ் பேச்சு, அரசியல் ஆளுமை, சுயமரியாதை சிந்தனை ஆகியவற்றை கூறுவார்கள். ஆனால் நான் கலைஞரின் பேரன்பால் ஈர்க்கப்பட்டவன்.

தலைவரை முத்தமிழ் அறிஞர், கலைஞர், சுயமரியாதைக்காரர் என பலவாறு அழைத்தாலும், அவரை "பேரன்புகாரர்" என்று கொண்டாட வேண்டும் என்பதற்கான காரணங்கள் கீழே:

🪷 கலைஞரின் பேரன்பை காட்டும் சில நிகழ்வுகள்

🌸 திருநங்கைகள் என்ற மரியாதைசொல்
மூன்றாம் பாலினத்தவரை குறைசொல்லாமல், "திருநங்கைகள்" என மரியாதையுடன் அழைத்தவர்.

🌟 "மாற்றுத் திறனாளிகள்" என்ற உயரிய அழைப்பு
உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களை "உடல் ஊனமுற்றவர்கள்" என்பதிலிருந்து, "மாற்றுத் திறனாளிகள்" என மாற்றிப் பெயரிட்டவர்.

💛 "கைம்பொன்" என்ற உருக்கமான மாற்றம்
"விதவை" என்பதை "கைம்பொன்" என உருக்கமான சொல்லால் மாற்றியவர்.

🏃‍♀️ சாந்திக்கு நியாயம் செய்த முதல்வர்
புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி என்ற பெண் தடகளப் போட்டியில் பதக்கம் வென்றபோது,
அவரிடம் ஆண் தன்மை அதிகம் இருப்பதை காரணம் காட்டி பதக்கத்தை திரும்ப பெற்றனர்.
இதன் பின்னர், தமிழக அரசு பரிசுத்தொகையை கொடுப்பதா வேண்டாமா என சந்தேகம் கொண்டிருந்தபோது,
"ஓடியது அந்த கால்கள் தானே?" எனக் கூறி ₹10 லட்சம் பரிசுத்தொகையை சாந்திக்கு வழங்கியவர் கலைஞர்.

🎬 "மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது" – நெஞ்சில் பதிந்த வரி
பராசக்தி திரைப்படத்தில் அவர் எழுதிய,

"மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது"
என்ற வரிகளின் அடிப்படையில்,
முதல்வராகப் பதவியேற்றதும் (1973), சைக்கிள் ரிச்சா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.

இது போன்று பல நிகழ்வுகளை கூறலாம் —
அவர் பேரன்பை உணர்த்தும் நினைவுகள் ஓயாது வரும்.

“‘தவழ்ந்த’ என்ற சொல்லால், தாமாக சிக்கிக்கொண்ட எதிர்க்கட்சியினர்!” : முதலமைச்சர் பேச்சு!

“திராவிட மாடல் ஆட்சியை, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்”
— முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

🎼 இளையராஜாவின் 'சிம்பனி நம்பர் 1 – வாலியன்ட்' – இசை வரலாற்றில் புதிய அத்தியாயம்

இளையராஜா, இந்திய இசையின் மன்னர், தனது முதல் ஆங்கில கிளாசிக்கல் சிம்பனியான 'சிம்பனி நம்பர் 1 – வாலியன்ட்' மூலம் சர்வதேச இசை உலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தச் சிம்பனி, அவரது இசை பயணத்தில் முக்கியமான படைப்பு ஆகும்.

🏥 முதல்வர் மருந்தகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த 1,000 புதிய மருந்தகங்கள்

தமிழ்நாட்டின் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின், 1,000 புதிய "முதல்வர் மருந்தகம்" (Muthalvar Marundhagam) மருந்தகங்களை தொடங்கிவைத்துள்ளார். இந்த திட்டம் மூலம், முக்கிய மருத்துவ பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும்.

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload x