எடப்பாடியை தூக்கிச் சாப்பிட்ட நரேந்திர மோடி!

16-05-2025
2 minute read

modi-eps

பிரதமரின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருட்களுக்கு 27 விழுக்காடு வரை வரிகளை விதித்தார். இந்த கூடுதல் வரிகளை விதிப்பதை 90 நாட்கள் அதாவது ஜூலை 9 ஆம் தேதி வரை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

இதுபற்றி மோடி வாயையே திறக்கவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே தமது முயற்சியின் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்தியாவின் விவகாரங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை எப்படி மோடி அனுமதிக்கிறார்?

இந்நிலையில், உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று என்பதால் இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தனக்கு விருப்பமில்லை என்கிறார் டிரம்ப்.

அதாவது ஒரு நிறுவனம் இந்தியாவுக்கு வர வேண்டுமா?வேண்டாமா? என்பதையும் டிரம்ப்பே முடிவு செய்கிறார்.

பிறகு இந்திய பிரதமர் எதற்கு?

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, மொத்தமாக நாட்டை அடமானம் வைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது.

தலை நிமிர்ந்து உலக நாடுகள் பங்கேற்கும் சபையில் உரத்த குரலில் பேசிய தலைவர்களைக் கண்டது இந்தியா.

ஆனால், இன்றைக்கு டிரம்ப் முன்பு கை கட்டி, வாய் மூடி... அப்படியே நம்ம எடப்பாடியைப் போல் மாறியிருக்கிறார் மோடி.

அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்ல 150 கோடி இந்திய மக்களுக்கும் இது அவமானம்.

வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு : எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி!

வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நீட் தேர்வு - தற்குறித்தனமாக பேசும் எடப்பாடி பழனிசாமி : முரசொலி தாக்கு!

நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. 'நீட்' விலக்கு மசோதாவை நிறைவேற்றிஅனுப்பி இருக்கிறது அரசு. மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வின் ‘நீட்' தேர்வு நாடகங்கள் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.

காஷ்மீர் தாக்குதல் - அமித்ஷா பதவி விலக வேண்டும் : நாடுமுழுவதும் வலுக்கும் கோரிக்கை!

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload x