பிரதமரின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருட்களுக்கு 27 விழுக்காடு வரை வரிகளை விதித்தார். இந்த கூடுதல் வரிகளை விதிப்பதை 90 நாட்கள் அதாவது ஜூலை 9 ஆம் தேதி வரை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இதுபற்றி மோடி வாயையே திறக்கவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் இடையே தமது முயற்சியின் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்தியாவின் விவகாரங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை எப்படி மோடி அனுமதிக்கிறார்?
இந்நிலையில், உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று என்பதால் இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தனக்கு விருப்பமில்லை என்கிறார் டிரம்ப்.
அதாவது ஒரு நிறுவனம் இந்தியாவுக்கு வர வேண்டுமா?வேண்டாமா? என்பதையும் டிரம்ப்பே முடிவு செய்கிறார்.
பிறகு இந்திய பிரதமர் எதற்கு?
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, மொத்தமாக நாட்டை அடமானம் வைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது.
தலை நிமிர்ந்து உலக நாடுகள் பங்கேற்கும் சபையில் உரத்த குரலில் பேசிய தலைவர்களைக் கண்டது இந்தியா.
ஆனால், இன்றைக்கு டிரம்ப் முன்பு கை கட்டி, வாய் மூடி... அப்படியே நம்ம எடப்பாடியைப் போல் மாறியிருக்கிறார் மோடி.
அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்ல 150 கோடி இந்திய மக்களுக்கும் இது அவமானம்.